வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் ஏற்பாட்டில் முன்னெடுப்பட்டுவரும் இனவிடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பேரணி புதுக்குடியிருப்பிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
இனவிடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கி என்ற தொனிப்பொருளில் பொத்துவிலில் இருந்து ஒரு அணியாகவும், வல்வெட்டித்துறையில் இருந்து மற்றொரு அணியாகவும் ஆரம்பித்த நடை பவணிகள் நேற்று (17) மாங்குளம் சந்தியில் ஒன்றிணைந்து தொடர்ந்தது.
மாங்குளம் சந்தியில் இருந்து ஆரம்பித்pது பரந்தன் ஊடாக வள்ளிபுனத்தை வந்தடைந்து. கடந்த 2006 ஆம் ஆண்டு வள்ளிபுனம் பகுதியில் விமானக் குண்டுவீச்சில் பலியாகிய மாணவர்களுக்கான அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு நகர் பகுதியை வந்து பேரணி நிறைவடைந்திருந்தது.
தமிழின அழிப்பு நாள் மே-18 நினைவேந்தல் முள்ளிவாய்க்காலில் முன்னெடுக்கப்பட உள்ள நிலையில் குறித்த பேரணி சற்று முன்னர் புதுக்குடியிருப்பில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
இந்த பேரணியானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம் வரை சென்று அங்கு இடம் பெறும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே அனைத்து உறவுகளையும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், வடமராட்சி, வல்வெட்டித்துறை